Poetry

பெண் மோகம்

பெண் மோகம்

ஆடை ஆபரண
ஆசையிணும் மேலாய்
ஆவேச தீயாய்
அவளது மோகம்

அனையா கதிரும் ொன்று
மனைவி நான் இங்கு
மனவாளன் எங்கென்று
மயங்கி கிடக்க

மடியில் அவளோடு
மயக்கத்தில் மணியோட
மங்கை என்னை
மறந்தானேன் ?

கை சேர்த்து போவதென்ன
தோல் சுமந்து வருவவென்ன
சட்டென்று கை சரிந்தால்
வெடுக்கென்று பிடிப்பதென்ன

பாசாங்கு இன்றி
பக்குவமாய் வந்து
படுக்கை வரை
வந்து விட்டாளே

எனக்கும் பிடித்தவள் தான்
என் இடத்தை பிடிப்பதா

தண்டிக்கவா, துண்டிக்கவா
துறக்கவா, துரத்தவா
இல்லை..
தூக்கி எறியவா

விரல் காட்டும் வித்தையை
வீசுடு எனக்கும்
விளையாட நான் தயார்
விடியும் வரைக்கும்.

அடங்கா கடலும்
அவளின் கனலுக்கு
அடிமை காணும்

அலையை கரை தடுக்கலாம்
நதியை அணை தடுக்கலாம்
ஆசை கொண்ட பெண் மனதை
தடுப்பதாகாது

மோகப் பெண்ணுக்கு
காமனும் காலடி
பெண்ணின் காதலுக்கு
காமமே முதற்படி

[ ]

backAll poems