Poetry

ஞாபகம்

ஞாபகம்

அழகைப் பார்த்தால்
அடியே உன்தன் ஞாபகம்
அன்பைப் பார்த்தால்
அடியே உன்தன் ஞாபகம்

என் முகத்தைக் கண்டால்
அடியே உன்தன் ஞாபகம்
அடியேன் அழகாய் தெரிந்தால்
அடியே உன்தன் ஞாபகம்

மலரைக் கண்டால்
அடியே உன்தன் ஞாபகம்
மழலை கேட்டால்
அடியே உன்தன் ஞாபகம்

நகம் கடித்தால்
அடியே உன்தன் ஞாபகம்
நரை வந்தாலும்
இருக்குமே உன் தன் ஞாபகம்

[]

backAll poems