Poetry

கணினி

மணியோ பதினொன்று
மனைவி நான் இங்கு
மனவாளன் எங்கென்று
மயங்கி கிடக்க

மடியில் அவளோடு
மயக்கத்தில் மணியோட
மங்கை என்னை
மறந்தானேன் ?

கை சேர்த்து போவதென்ன
தோல் சுமந்து வருவவென்ன
சட்டென்று கை சரிந்தால்
வெடுக்கென்று பிடிப்பதென்ன

பாசாங்கு இன்றி
பக்குவமாய் வந்து
படுக்கை வரை
வந்து விட்டாளே

எனக்கும் பிடித்தவள் தான்
என் இடத்தை பிடிப்பதா

தண்டிக்கவா, துண்டிக்கவா
துறக்கவா, துரத்தவா
இல்லை..
தூக்கி எறியவா

விரல் காட்டும் வித்தையை
வீசுடு எனக்கும்
விளையாட நான் தயார்
விடியும் வரைக்கும்.

[]

backAll poems